பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை,
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “ வாக்காளர் பட்டியலில் குளறுபடி என்பதை ஏற்க முடியாது, இந்திய தேர்தல் ஆணையத்தின் பட்டியலைத்தான் பயன்படுத்துகிறோம். 25 பதவியிடங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.